Saturday, November 18, 2006

வீட்டிலேயே செய்யுங்க-அவல்

வீட்டிலேயே செய்யுங்க-அவல்
Issue date : 27-feb-2004

அவல்.. விரத தினங்களில் மட்டுமே நினைவுக்கு வரும் பெயர் இது. பசியை அடக்குவதோடு, தெம்பையும் தரக்கூடியது என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. அந்த தினங்களில்கூட ஊறவைத்த அவலுடன் தேங்காய், சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடுவதுதான் நமது வழக்கம். இந்த அவல் அற்புதமான ஒரு டிபன் அயிட்டம் என்பது தெரியுமா உங்களுக்கு? அவலை வைத்து விதம்விதமாக சமைக்கலாம். உங்களுக்காக இங்கே நான்கு Ôஅவல்Õ வெரைட்டிகள்..

அவல் புதினா கபாப்



தேவை: கெட்டி அவல் 1 கப், உருளைக் கிழங்கு 2, கார்ன்ப்ளார் 1 டேபிள் ஸ்பூன், புதினா 1 கட்டு, மல்லித்தழை 1 கைப்பிடி அளவு, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், பச்சை மிளகாய் 3, மாங்காய்த் (ஆம்சூர்) தூள் 1 டீஸ்பூன், மைதா 2 டேபிள் ஸ்பூன், ப்ரெட் தூள், உப்பு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை: அவலைச் சுத்தம் செய்து, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு உதிர்த்து வையுங்கள். புதினா, மல்லி, மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்குங்கள். ஊறிய அவலை பிழிந்தெடுத்து அதனுடன் கிழங்கு, நறுக்கிய பொருட்கள், கார்ன்ப்ளார், மாங்காய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசையுங்கள். மைதாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நீர்க்கக் கரைத்து வையுங்கள். அவல் கலவையை சிறிது சிறிதாக எடுத்து, விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் முக்குங்கள். பிறகு ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் வேலை முடிந்தது.

இந்த அவல் புதினா கபாபை அப்படியே சாப்பிட லாம். தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால் கூடுதலாய் ருசிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?!

அவல் கிச்சடி



தேவை: கெட்டி அவல் அரை கப், தோலுடன் கூடிய உடைத்த பாசிப் பயறு 1 கப், பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4 பல், புதினாவும் மல்லியும் தலா 10 இலை, சோம்பு 1 சிட்டிகை, சீரகம் 1 சிட்டிகை, மஞ்சள் தூள் 1 சிட்டிகை, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: அவலை அரை மணி நேரம் நீரில் ஊற வையுங்கள். பயறை இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் ஊறவைத்த அவல் (பிழிந்தெடுத்து), மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடம் வேக வையுங்கள்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய், மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கி, சோம்பு, சீரகத்தைத் தாளியுங்கள். அதனுடன் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் அவல், பயறு கலவை, தேவை யான உப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள். அவல் கிச்சடி ரெடி.

மசாலா அப்பளம், ஊறுகாயுடன் இதை சாப்பிட்டால் ஜோராக இருக்கும்.

வெண்ணெய், நெய் தவிர்த்துவிட்டு சமைத்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிக நல்ல உணவு இது.

அவல் பேல் பூரி


தேவை: பொரித்த அவல் 2 கப், பெரிய வெங்காயம் 1, விரல் நீள அளவு வெள்ளரிக்காய் 1, கேரட் 1, மாங்காய் 1 துண்டு, புதினா 15 இலை, மல்லி சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை 2 டேபிள் ஸ்பூன், வறுத்த பட்டாணி 1 டேபிள் ஸ்பூன், வறுத்த பாசிப் பயறு 2 டேபிள் ஸ்பூன், காராப்பூந்தி 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், மிளகுத்தூள் அரை டீஸ்பூன், கறுப்பு உப்பு கால் டீஸ்பூன், உப்பு சிறிதளவு, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: காய்களைப் பொடியாக நறுக்குங்கள். அவலைச் சுத்தம் செய் யுங்கள். அவல், காய் மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விரும்பினால் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த சர்க்கரையைக் கலந்து சாப்பிட லாம். கூடுதல் சுவை நாக்கைச் சொக்கவைக்கும்.

அவல் சப்பாத்தி


தேவை: கெட்டி அவல் அரை கப், கோதுமை மாவு 1 கப், சற்று புளித்த தயிர் 1 கப், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா (விரும்பினால்) அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் அல்லது நெய் தேவைக்கு.

செய்முறை: அவலைச் சுத்தம் செய்து, அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையுங்கள். இதனை சிறு சிறு உருண்டை களாக எடுத்து சப்பாத்திகளாகத் தேயுங்கள். சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுட்டெடுங்கள்.

வழக்கமாக சப்பாத்திக்குத் தொட்டுக்கொள் ளும் அனைத்து சைடு டிஷ்களும் இதற்கும் பொருந்தும். அதிலும் குறிப்பாக கெட்டி பருப்புக் கலவை பெஸ்ட் காம்பினேஷன்.

No comments: