Saturday, November 18, 2006

30 நாள்.. 30 குழம்பு

30 நாள்.. 30 குழம்பு
Issue date :16-12-2004

இன்னிக்கு என்ன குழம்பு வெக்கறது?& இது-தான் வாரத்தின் ஏழு நாளும், வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாளும் சமையலைப் பொறுத்தவரை இல்லத்தரசிகளின் பெரும் குழப்பம்!

குழப்பத்துக்கு அவசியமே இல்லை.. மாதம் முழுவதும் தினம் ஒரு தினுசாக செய்து ருசிக்க முப்பது விதமான குழம்புகளை செய்முறையோடு சொல்கிறேன் என்று உதவிக்கு வருகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

பருப்பு உருண்டைக் குழம்பு   பாசிப் பயறு தண்ணிக் குழம்பு

திடீர் மோர்க் குழம்பு   கட்லெட் குழம்பு

சிவப்பு மோர்க் குழம்பு   வறுத்தரைத்த மிளகுக் குழம்பு

சட்னி மோர்க் குழம்பு   பாகற்காய் பிட்லை
நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் எப்போதும் இருக்கும் அதே சாமான்கள் தான். எதை எதை எதனோடு எந்தளவுக்கு சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான் புதுப்புது சுவைகளில் வித விதமான ஐட்டங்கள் கிடைக்கின்-றன. சோயா, பனீர் என்று ஃபாஸ்ட் ஃபுட் சமாசார பொருட்களைக் கூட நமது பாரம்பரிய சமையலில் புகுத்தி புதுச்சுவையை உண்டாக்கலாம் என்று ஆச்சரியப்படுத்தும் ரேவதி, சேப்பங்கிழங்கு சாம்பார் முதல் மூலிகை மருந்து குழம்பு வரை வெரைட்டி காட்டி கலக்குகிறார்.

கைப்பக்குவத்தில் பெயரெடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, சமையலில் அ-னா, ஆ-வன்னாகூட தெரி-யாத புதுப்பெண்களுக்கும் நிச்சயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும் இந்தக் கையேடு. படித்து.. செய்து.. ருசிங்க. பரி-மாறி குடும்பத்தையும் அசத்துங்க!

பருப்பு உருண்டைக் குழம்பு



தேவை (உருண்டைக்கு); துவரம் பருப்பு, கடலை பருப்பு தலா அரை கப், மிளகாய்வற்றல் 4, சோம்பு அரை டீஸ்-பூன், சின்ன வெங்கா-ம் 15, பூண்டு 10, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது, உப்பு தேவைக்கு.


செய்-முறை; பருப்புகளை ஒரு மணி நேரம் தண்-ணீ-ரில் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மிளகாய் வற்றல், சோம்பு, சேர்த்து சற்று கர-க-ரப்-பாக அரை-யுங்கள். வெங்காயம், பூண்டு, கறி-வேப்-பிலை, மல்லியை பொடியாக நறுக்கி அரைத்த விழுது தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி ஆவி-யில் வேக வைத்தோ, எண்ணெயில் பொரித்தோ எடுங்கள்.


குழம்புக்கு; சின்ன வெங்காயம் 1 கப், பூண்டு அரை கப், தக்காளி 2, புளி ஒரு சிறு உருண்டை, மிள-காய்த்-தூள் 4 டீஸ்-பூன், தனியாத்தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்-பூன், கடுகு அரை டீஸ்-பூன், வெந்-த-யம் கால் டீஸ்-பூன், சோம்பு கால் டீஸ்-பூன், எண்-ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறி-வேப்-பிலை சிறிது, தேங்-காய்த்-து-ரு-வல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்-முறை; வாண-லி-யில் எண்ணெயை காய வைத்து கடுகு, வெந்-த-யம், சோம்பு தாளித்து தோல் நீக்கிய வெங்-கா-யம், பூண்டை சேர்த்து வதக்-குங்-கள். பின்னர், நறுக்கிய தக்காளி, மிள-காய்த்-தூள், தனி-யாத்-தூள், மஞ்-சள் தூள் சேர்த்து வதக்கி புளி கரை-சல் உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க விடுங்-கள். தேங்-காயை அரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்-க-விட்டு உருண்-டை-களை சேருங்-கள். மித-மான தீயில் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்-குங்-கள்.


பாசிப் பயறு தண்ணிக் குழம்பு




தேவை; தோலு-டன் முழு பாசிப் பயறு 1 கப், பெ.வெங்-கா-யம் 2, பூண்டு 4 பல், தக்காளி 2, புளி சிறு நெல்லி அளவு, மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், மல்-லித்-தூள் ஒன்-றரை டீஸ்-பூன், மஞ்-சள் தூள் கால் டீஸ்-பூன், பூண்டு 6 பல், உப்பு தேவைக்கு, எண்-ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்-பூன், வெந்-த-யம், சோம்பு தலா கால் டீஸ்-பூன், கறி-வேப்-பிலை சிறி-த-ளவு.

செய்-முறை; பாசிப் பயறை வெறும் வாண-லி-யில் வாசனை வரும்-வரை வறுத்து இரண்டு கப் தண்-ணீர் சேர்த்து வேக வையுங்-கள். வெங்-கா-யம், தக்-கா-ளியை பொடி-யாக நறுக்-குங்-கள். ஒன்-றரை கப் தண்-ணீ-ரில் புளியை கரைத்து வடி-கட்-டுங்-கள். இந்த கரை-ச-லு-டன் பாசிப் பயறு (வேக வைத்த தண்-ணீ-ரு-டன் சேர்த்து), வெங்-கா-யம், தக்காளி மிள-காய்த்-தூள், மஞ்-சள்-தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சோம்பு தாளித்து மல்-லித்-தூள் சேர்த்து வதக்கி குழம்-பில் சேருங்-கள். குழம்பை இறக்-கப் போகும்-போது ஒன்-றி-ரண்-டாக நசுக்கிய பூண்டு, கறி-வேப்-பிலை சேர்த்து இறக்-குங்-கள்.


திடீர் மோர்க் குழம்பு



தேவை; லேசாக புளித்த மோர் 1 கப், கடலை மாவு 2 டீஸ்-பூன், கடுகு, உளுந்து, சீர-கம் தலா கால் டீஸ்-பூன், பெருங்-கா-யத்-தூள், மஞ்-சள்-தூள் தலா 1 சிட்-டிகை, மிள-காய் 2, எண்-ணெய் 2 டீஸ்-பூன், கறி-வேப்-பிலை, உப்பு தேவைக்கு.

செய்-முறை; அரை கப் தண்-ணீ-ரில் கடலை மாவு, மோர், உப்பு, மஞ்-சள் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வையுங்-கள். மிள-காயை பொடி-யாக நறுக்-குங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து, சீர-கம், பெருங்-கா-யம், மிள-காய், கறி-வேப்-பிலை தாளித்து கடலை மாவு கரை-சலை சேர்த்து நன்-றாக கொதிக்க வைத்து இறக்-குங்-கள். காய்-கள் சேர்க்க விரும்-பி-னால் சௌ-சௌ, வெண்டை, பூசணி ஆகி-ய-வற்-றில் ஏதே-னும் ஒன்றை, வதக்கி, தனி-யாக வேக வைத்து சேர்க்-க-லாம்.


கட்லெட் குழம்பு


தேவை (கட்-லெட்-டுக்கு); கடலை மாவு 1 கப், மிள-காய் 4, எண்-ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, பெ.வெங்-கா-யம் 1, இஞ்சி சிறு துண்டு, பூண்டு 5 பல், மல்-லித்-தழை சிறி-தளவு.

செய்முறை; வெங்-கா-யம், பூண்டு, இஞ்சி, மிள-காய், மல்-லித்-த-ழையை பொடி-யாக நறுக்-குங்-கள். கடலை மாவை கெட்-டி-யாக கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் விட்டு சூடாக்கி வெங்-கா-யம், சிறி-த-ளவு உப்பு, பூண்டு, இஞ்சி, மிள-காய், மல்-லித்-த-ழையை சேர்த்து வதக்-குங்-கள். பிறகு கடலை மாவு கரை-சலை சேர்த்து கலவை சுருண்டு வரும்-வரை கிளறி இறக்கி ஒரு தட்-டில் கொட்டி சமப்-ப-டுத்-துங்-கள். ஆறி-ய-வு-டன் சிறு துண்-டு-க-ளாக்கி சூடான எண்-ணெ-யில் பொரித்-தெ-டுங்-கள்.

குழம்-புக்கு; பெ.வெங்-கா-யம் 2, தக்காளி 3, புளி சிறு உருண்டை, மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், தனி-யாத்-தூள் 1 டீஸ்-பூன், எண்-ணெய் 4 ஸ்பூன், உப்பு தேவைக்கு, தேங்-காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, கடுகு, வெந்-த-யம், உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்-பூன், முந்-திரி 5.

குழம்பு செய்-முறை; வாண-லி-யில் எண்-ணெயை காய வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சோம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்-கா-யம், தக்காளியை வதக்கி 2 கப் நீரில் கரைத்த புளி கரை-சல், மிள-காய்த்-தூள், தனி-யாத்-தூள், உப்பு சேர்த்து கொதிக்-க-வை-யுங்-கள். தேங்-காய்த் துறு-வ-லு-டன் முந்-தி-ரியை சேர்த்து அரைத்து குழம்-பில் ஊற்-றுங்-கள். ஐந்து நிமி-டம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள். பரி-மா-றும்-போது பொரித்த கட்-லெட்-களை குழம்-பில் சேர்க்க வேண்-டும்.




சிவப்பு மோர்க் குழம்பு



தேவை; புளிக்-காத கெட்-டித் தயிர் 1 கப், பாலாடை கால் கப், கடுகு, வெந்-த-யம் தலா அரை டீஸ்-பூன், மஞ்-சள்-தூள் ஒரு சிட்-டிகை, எண்-ணெய் 2 டீஸ்-பூன், உப்பு, கறி-வேப்-பிலை தேவைக்கு.

அரைக்க; மிள-காய் வற்றல் 3, தனியா 1 டீஸ்-பூன், சீர-கம் அரை டீஸ்-பூன், இஞ்சி சிறு துண்டு, தேங்-காய்த்-து-ரு-வல் 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 2 டீஸ்-பூன்

செய்-முறை; அரைக்-கக் கூறி-யுள்ள பொருட்-க-ளில் இஞ்சி, தேங்-காய்த்-து-ரு-வல் நீங்-க-லாக மற்-ற-வற்றை அரை கப் நீரில் அரை மணி நேரம் ஊற-வைத்து பிறகு இஞ்சி, தேங்-காய்த் துரு-வல் சேர்த்து நைஸாக அரைத்-தெ-டுங்-கள். தயி-ரில் உப்பு, மஞ்-சள்-தூள், அரைத்த விழுது சேர்த்து கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெ-யைக் காய-வைத்து கடுகு, வெந்-த-யம், கறி-வேப்-பிலை தாளித்து கரைத்து வைத்-துள்ள கரை-சலை ஊற்றி, கொதி வரும்-போது இறக்-கி-வி-டுங்-கள். இறக்-கிய பிறகு பாலா-டையை நன்கு கலக்கி அதில் சேர்த்து பரி-மா-றுங்-கள். காய்-கறி சேர்ப்-ப-தா-னால் (வெண்-டைக்-காய், வெள்ளை பூசணி, சௌ-சௌ) தனி-யாக வதக்கி வேக வைத்து சேர்க்க வேண்-டும்.



வறுத்தரைத்த மிளகுக் குழம்பு



தேவை; சின்ன வெங்-கா-யம் 1 கப், புளி எலு-மிச்சை அளவு, தக்காளி 4, எண்-ணெய் 5 டே.ஸ்பூன், கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம் தலா அரை டீஸ்-பூன், உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை சிறிது.

அரைக்க; மிளகு, சீர-கம் தலா 2 டேபிள் ஸ்பூன், உளுந்து, கடலை பருப்பு தலா 2 டீஸ்-பூன், வெந்-த-யம் அரை டீஸ்-பூன், சுக்கு 1 துண்டு, மிள-காய் வற்றல் 4.

செய்-முறை; புளியை அரை கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்டி வையுங்-கள். வாண-லி-யில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்-ணெயை காய வைத்து அரைக்கக் கூறியுள்ள பொருட்களை சூடுவர வறுத்து, ஆற-வைத்து கால் கப் தண்-ணீர் சேர்த்து நைஸாக அரை-யுங்-கள். மீத-முள்ள எண்-ணெயை காய-வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம் தாளித்து வெங்-கா-யம், தக்-கா-ளியை சிறிது உப்பு சேர்த்து வதக்-குங்-கள். அத-னு-டன் புளி கரை-சல், அரைத்த விழுது, தேவை-யான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கறி-வேப்-பிலை தூவி இறக்-குங்-கள். பூண்டு சேர்க்க விரும்-பி-னால் வெங்-கா-யத்-து-டனேயே சேர்த்து வதக்கிவிட வேண்-டும்.


சட்னி மோர்க் குழம்பு



தேவை; புளிக்-காத கெட்-டித் தயிர் 1 கப், மஞ்-சள் தூள் 1 சிட்-டிகை, எண்-ணெய் 2 டீஸ்-பூன், கடுகு, வெந்-த-யம் தலா கால் டீஸ்-பூன், பெருங்-கா-யத்-தூள், கறி-வேப்-பிலை சிறி-த-ளவு, உப்பு தேவைக்கு.

அரைக்க; தேங்-காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பொட்-டுக் கடலை 2 டீஸ்-பூன், மிள-காய் 2.

செய்-முறை; அரைக்கக் கூறி-யுள்ள பொருட்-களை சிறி-த-ளவு தண்-ணீர் சேர்த்து நைஸாக அரை-யுங்-கள். தயி-ரில் அரை கப் தண்-ணீர், அரைத்த விழுது, மஞ்-சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு, வெந்-த-யம், பெருங்-கா-யத்-தூள், கறி-வேப்-பிலை தாளித்து தயிர் கரை-சலை சேருங்-கள். கை விடா-மல் கிள-றிக்-கொண்டே ஒரு நிமி-டம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள்.


பாகற்காய் பிட்லை




தேவை; துவ-ரம் பருப்பு 1 கப், பாகற்-காய் 2, தக்காளி 3, பெ.வெங்-கா-யம் 1, மிள-காய் வற்றல் 10, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு அரை டே.ஸ்பூன், சீர-கம் அரை டீஸ்-பூன், தேங்-காய் துருவல் 1 டே.டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து அரை டீஸ்-பூன், புளி நெல்-லிக்-காய் அளவு, பெருங்-கா-யம் சிறி-த-ளவு, மஞ்-சள் தூள் சிறி-த-ளவு, உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, எண்-ணெய் 3 டே.ஸ்பூன்.

செய்-முறை; துவ-ரம் பருப்புடன் மஞ்-சள் தூள், இரண்டு கப் தண்-ணீர் சேர்த்து வேக வையுங்-கள். பாகற்-காயை விரல் நீள துண்-டு-க-ளா-க-வும், வெங்-கா-யம், தக்-கா-ளியை சிறு துண்-டு-க-ளா-க-வும் நறுக்-குங்-கள். புளியை ஒன்-றரை கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்-டுங்-கள். வாண-லி-யில் 1 டே.ஸ்பூன் எண்-ணெயை சூடாக்கி, கடலை பருப்பு, சீர-கம், மிள-காய் வற்றல், தனியா, தேங்-காயை மித-மான தீயில் சிவக்க வறுத்து ஆற-வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை-யுங்-கள். மீதமுள்ள எண்-ணெயை காய வைத்து கடுகு, உளுந்து தாளித்து பாகற்-காயை சேருங்-கள். காய் நன்கு வதங்-கி-ய-தும் வெங்-கா-யம் சேர்த்து வதக்கி புளி கரை-சல், பெருங்-கா-யம், தக்காளி, உப்பு, கறி-வேப்-பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு அரைத்து வைத்-துள்ள விழு-தை-யும், வேக வைத்த பருப்-பை-யும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து மல்-லித்-தழை தூவி இறக்-குங்-கள்.


மொச்சைக்கொட்டைக் குழம்பு


தேவை; காய்ந்த மொச்சை 1 கப், புளி எலு-மிச்சை அளவு, சின்ன வெங்-கா-யம் அரை கப், பூண்டு கால் கப், தக்காளி 4, மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், மல்-லித்-தூள் 2 டீஸ்-பூன், மஞ்-சள் தூள் கால் டீஸ்-பூன், எண்-ணெய் கால் கப், கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம், சோம்பு தலா கால் டீஸ்-பூன், உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை சிறி-த-ளவு.

செய்-முறை; மொச்சை பயறை வெறும் வாண-லி-யில் சூடு வர வறுத்து ஒன்-றரை கப் தண்-ணீர் சேர்த்து நன்கு வேக வையுங்-கள். (முந்தின நாளே ஊற வைத்து, வறுக்-கா-ம-லும் வேக வைக்-க-லாம்) வெந்-த-தும் அந்த நீரை வடிகட்டி அத-னு-டன் மேலும் அரை கப் நீர் சேர்த்து புளியை கரைத்து வடி-கட்-டுங்-கள். பூண்டு, வெங்-கா-யத்-தின் தோலை நீக்கி வையுங்-கள். தக்-கா-ளியை பொடி-யாக நறுக்-குங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை காய வைத்து கடுகு, உளுந்து, வெந்-த-யம், சீர-கம், சோம்பு தாளித்து, பூண்டு, வெங்-கா-யம் சேர்த்து வதக்-குங்-கள். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி கடை-சி-யாக புளி-க்க-ரை-சல், மிள-காய்த்-தூள், மல்-லித்-தூள், மஞ்-சள் தூள், வேக வைத்த மொச்சை, உப்பு சேர்த்து கொதிக்க வையுங்-கள். பச்சை வாடை நீங்கி குழம்பு கெட்-டி-யா-ன-தும் கறி-வேப்-பிலை தூவி இறக்-குங்-கள்.


பகோடா குழம்பு


தேவை (பகோ-டா-வுக்கு); கடலை மாவு அரை கப், பெரிய வெங்-கா-யம் 1, மிள-காய் 1, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, சோம்பு கால் டீஸ்-பூன், இஞ்சி பூண்டு (ஒன்-றி-ரண்-டாக நசுக்-கி-யது) அரை டீஸ்-பூன், எண்-ணெய் பொரிக்-கத் தேவை-யான அளவு, உப்பு தேவைக்கு.

செய்-முறை; வெங்-கா-யம், மிள-காய், கறி-வேப்-பிலை, மல்-லித்-த-ழையை பொடி-யாக நறுக்கி அத-னு-டன் கடலை மாவு, இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு, ஒரு கரண்டி சூடான எண்-ணெய் ஆகி-ய-வற்றை சேர்த்து சிறி-த-ளவு தண்-ணீர் தெளித்து பிசறி வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய்விட்டு சூடாக்கி கடலை மாவு கல-வையை கொஞ்-சம் கொஞ்-ச-மாக போட்டு பொரித்-தெ-டுங்-கள்.

குழம்-புக்கு; பெரிய வெங்-கா-யம் 2, தக்காளி 4, இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்-பூன், மிள-காய்த்-தூள் 3 டீஸ்-பூன், மல்-லித்-தூள் 1 டீஸ்-பூன், புளி நெல்-லிக்-காய் அளவு, உப்பு தேவைக்கு, வெந்-த-யம், சீர-கம் தலா கால் டீஸ்-பூன், பட்டை 1. எண்-ணெய் 3 டேபிள் ஸ்பூன்.


அரைக்க; தேங்-காய்த் துரு-வல் 2 ஸ்பூன், பொட்-டுக்-க-டலை 2 டீஸ்-பூன்

செய்-முறை; அரைக்க கூறியுள்ளவற்றை நைஸாக அரைத்-தெ-டுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் ஊற்றி சூடாக்கி வெந்-த-யம், சீர-கம், பட்டை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்-கா-யம், தக்-கா-ளியை வதக்கி, 2 கப் நீரில் கரைத்த புளி கரை-சல், மிள-காய்த்-தூள், மல்-லித்-தூள், உப்பு சேருங்-கள். பச்சை வாடை போக கொதித்-த-தும் தேங்-காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள். பரி-மா-று-வ-தற்கு சற்று முன்பு பகோ-டாக்-களை அதில் போட்டு பரி-மா-றுங்-கள்.



ஆந்திரா புளிக் குழம்பு


தேவை; வெண்-டைக்-காய் 150 கிராம், பெரிய வெங்-கா-யம் 2, மிள-காய் 4, தக்காளி (பெரி-யது) 5, புளி எலு-மிச்சை அளவு, மிள-காய்த்-தூள் 1 டீஸ்-பூன், எண்-ணெய் 4 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை சிறி-த-ளவு.



செய்-முறை; வெண்-டைக்-காயை சுத்தம் செய்து ஒரு அங்-குல துண்-டு-க-ளா-க-வும், வெங்-கா-யத்தை நீள நீள-மா-க-வும், தக்-கா-ளியை பொடி-யா-க-வும் நறுக்-குங்-கள். மிள-காயை இரண்-டாக கீறி வையுங்-கள். புளியை இரண்டு கப் தண்-ணீ-ரில் கரைத்து வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை காய வைத்து வெங்-கா-யம், மிள-காய் சேர்த்து வதக்-குங்-கள். பிறகு தீயை மித-மாக்கி, வெண்-டைக்-காய் சேர்த்து வதக்-குங்-கள். காய் நன்கு வதங்-கி-ய-தும் தக்காளி, மிள-காய்த்-தூளை சேர்த்து தக்காளி மசி-யும் வரை வதக்கி புளி கரை-சல், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து கறி-வேப்-பிலை தூவி இறக்-குங்-கள்.


பனீர் மசாலாக் குழம்பு


தேவை; பனீர் கால் கிலோ, பெரிய வெங்-கா-யம் 2, தக்காளி 4, எண்-ணெய் 3 டேபிள் ஸ்பூன் மற்-றும் பனீர் பொரிக்-கத் தேவை-யான அளவு, பட்டை, பிரிஞ்சி இலை தலா 1,

அரைக்க; தேங்-காய்த் துரு-வல் 2 டேபிள் ஸ்பூன், முந்-திரி 12, இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிள-காய்த் தூள் 2 டீஸ்-பூன், மல்-லித்-தூள் 1 டீஸ்-பூன், சோம்பு 1 டீஸ்-பூன், பட்டை, லவங்-கம், ஏலக்-காய் தலா 1.

செய்-முறை; அரைக்-கக் கூறி-யுள்ள சாமான்-களை ஒன்-றா-கச் சேர்த்து சிறி-த-ளவு தண்-ணீர் விட்டு நைஸாக அரைத்-தெ-டுங்-கள். வெங்-கா-யம், தக்-கா-ளியை பொடி-யாக நறுக்-குங்-கள். பனீரை சிறு துண்-டு-க-ளாக நறுக்-குங்-கள். வாண-லி-யில் மூன்று ஸ்பூன் எண்ணெயை காய வைத்து பட்டை, பிரிஞ்சி இலையை தாளி-யுங்-கள். பிறகு வெங்-கா-யம், தக்-கா-ளியை ஒன்-றன்-பின் ஒன்-றாக சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, ஒன்-றரை கப் தண்-ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வையுங்-கள். வாண-லி-யில் எண்-ணெயை ஊற்றி சூடாக்கி பனீர் துண்-டங்-களை பொன்-னி-ற-மாக பொரித்-தெ-டுங்-கள். பொரித்-த-வற்றை குழம்-பில் சேர்த்து மேலும் ஐந்து நிமி-டங்-கள் கொதிக்க வைத்து இறக்-குங்-கள்.


மருந்துக் குழம்பு


தேவை; சின்ன வெங்-கா-யம் 1 கப், பூண்டு அரை கப், தக்காளி 3, புளி எலு-மிச்சை அளவு, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை, உப்பு தேவைக்கு.

அரைக்க; மிளகு 3 டீஸ்-பூன், சீர-கம் 2 டீஸ்-பூன், கண்-ட-திப்-பிலி 2 சிறிய குச்சி, சுக்கு விரல் நீளத் துண்டு, வால்-மி-ளகு அரை டீஸ்-பூன், அரிசி திப்-பிலி சிறி-த-ளவு, வெந்-த-யம் அரை டீஸ்-பூன், தனியா 3 டீஸ்-பூன்.

தாளிக்க; எண்-ணெய் 4 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்-பூன், உளுந்து 1 டீஸ்-பூன், வெந்-த-யம் அரை டீஸ்-பூன், சீர-கம் அரை டீஸ்-பூன்.


செய்-முறை; அரைக்-கக் கூறி-யுள்ள பொருட்-களை வெறும் வாண-லி-யில் சூடு-வர வறுத்து நைஸாக அரை-யுங்-கள். பூண்டு, வெங்-கா-யத்தை இரண்-டி-ரண்-டாக நறுக்-குங்-கள். புளியை இரண்டு கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்-டுங்-கள். இந்த நீரு-டன் தக்காளி, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை, சிறி-த-ளவு உப்பு சேர்த்து கரைத்-தெ-டுங்-கள். வாண-லி-யில் எண்-ணெய் ஊற்றி காய-வைத்து கடுகு, உளுந்து, சீர-கம், வெந்-த-யம் தாளித்து பூண்டு, வெங்-கா-யம் சேர்த்து வதக்-குங்-கள். வதங்-கி-ய-தும் புளி கரை-சலை ஊற்றி ஐந்து நிமி-டம் கொதிக்க வைத்து அரைத்து வைத்-துள்ள பொடியை தூவுங்-கள். கிளறி இரண்டு நிமி-டம் கொதிக்க வைத்து இறக்-குங்-கள்.

சளி, அஜீரணத்துக்கு நல்மருந்து இந்தக் குழம்பு.


அரைத்துவிட்ட சாம்பார்


தேவை; துவ-ரம்-ப-ருப்பு 1 கப், வெண்டை அல்லது வேறு ஏதே-னும் காய் 150 கிராம், பெரிய வெங்-கா-யம் 1, தக்காளி 2, மிள-காய் வற்றல் 8, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு அரை டே.ஸ்பூன், வெந்-த-யம், சீர-கம் அரை டீஸ்-பூன், தேங்-காய் துருவல் 1 டே.ஸ்பூன், எண்-ணெய் 4 டீஸ்-பூன், புளி நெல்-லிக்-காய் அளவு, பெருங்-கா-யம் சிறிது, மஞ்-சள் தூள் சிறிது, உப்பு தேவைக்கு, கறி-வேப்-பிலை, மல்-லித்-தழை சிறி-த-ளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்-பூன்.


செய்-முறை; துவ-ரம் பருப்பை மஞ்-சள் தூள், இரண்டு கப் தண்-ணீர் சேர்த்து குழைய வேக வையுங்-கள். வெங்-கா-யம், தக்காளி, காய்-களை சுத்தம் செய்து நறுக்-குங்-கள். வாண-லி-யில் 2 டீஸ்-பூன் எண்-ணெய் விட்டு மித-மான தீயில் மிள-காய் வற்றல், தனியா, கடலை பருப்பு, வெந்-த-யம், சீர-கம், தேங்-காய்த்-து-ரு-வல் ஆகி-ய-வற்றை பொன்-னி-ற-மாக வறுத்து ஆற வைத்து அரை-யுங்-கள். புளியை ஒன்-றரை கப் தண்-ணீ-ரில் கரைத்து வடி-கட்டி அத-னு-டன் பெருங்-கா-யம், கறி-வேப்-பிலை, உப்பு, வெங்-கா-யம், தக்காளி சேர்த்து கொதிக்க வையுங்-கள். கொதிக்க ஆரம்-பித்-த-தும் காய்-களை சேர்த்து வெந்-த-தும் பருப்பு கரை-சல், அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்-குங்-கள். வாண-லி-யில் 2 டீஸ்-பூன் எண்-ணெய் விட்டு காய்ந்-த-தும் கடுகு, உளுந்து தாளித்து சேர்த்து, கறி-வேப்-பிலை, மலித்-தழை தூவி பரி-மா-றுங்-கள்.

1 comment:

M Z said...

Howcome no other spice in your andra kuzhambu? no coriander powder, no cummin powder??? I dont think this is the right way of making it